பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.
பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
பொறுமை கடலினும் பெரிது.
பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.