தமிழ்ப் பழமொழிகள் - பொ, போ

  • பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
  • பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
  • பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
  • பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.
  • பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
  • பொறுமை கடலினும் பெரிது.
  • பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
  • பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
  • போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
  • போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
  • போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.