தமிழ்ப் பழமொழிகள் - பு, பூ

  • புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
  • புத்திமான் பலவான்.
  • புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
  • புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
  • பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
  • பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
  • பூவிற்றகாசு மணக்குமா?
  • பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.