தமிழ்ப் பழமொழிகள் - நு, நூ, நெ, நே, நை, நொ, நோ

  • நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
  • நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.
  • நூல் கற்றவனே மேலவன்.
  • நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
  • நூற்றைக் கொடுத்தது குறுணி.
  • நெய் முந்தியோ திரி முந்தியோ.
  • நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
  • நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?
  • நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
  • நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.
  • நேற்று உள்ளார் இன்று இல்லை.
  • நைடதம் புலவர்க்கு ஒளடதம்.
  • நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
  • நொறுங்கத் தின்றால் நூறு வயது.
  • நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.
  • நோய் கொண்டார் பேய் கொண்டார்.
  • நோய்க்கு இடம் கொடேல்.