தமிழ்ப் பழமொழிகள் - சு, சூ

  • சுக துக்கம் சுழல் சக்கரம்.
  • சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
  • சுட்ட சட்டி அறியுமா சுவை.
  • சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
  • சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.
  • சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
  • சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
  • சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
  • சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
  • சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
  • சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
  • சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
  • சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
  • சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.